search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேட்பு"

    • சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை மற்றும் இருக்கூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரி சுரங்கத்தின் அங்கீகாரம் காலவதியானதை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலமாக ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மல்டிகலர் கிரானைட் குவாரி சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பரமத்தியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது.
    • ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் கோபா லகிருஷ்ணன் மற்றும் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பிரசாத், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் மற்றும் வீராச்சி பாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், ஆலையின் துணைத் தலைவர் (தயாரிப்பு) வீரபாகு, மூத்தபொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் சுற்றுச்சூ ழல்) பழனிகுமரேசன், ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகா வல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×