search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூத்தாநல்லூர்"

    கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறை காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது.

    கூத்தாநல்லூர் பகுதியில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் பணி செய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    கூத்தாநல்லூர் அருகே உள்ள மேலகொண்டாளி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 35). இவரது மனைவி பூங்குழலி. இவர்களுக்கு பூபாலன், தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். தங்கபாண்டியன் மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று கூத்தாநல்லூர் இஸ்மாயில் தெருவில் சூறை காற்றில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கைபட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது மனைவி பூங்குழலி கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூத்தாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள குடிதாங்கி சேரியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 24). இவரும், திருவாரூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மகள் பிரேமாவும் ஆந்திரா பஞ்சு மில்லில் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் திருமணமாகி 5 மாதமான நிலையில் ஒரு டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது பிரேமாவை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், பிரசவம் சிரமமாக இருக்கும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேமா குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி அறிந்த பிரேமாவின் தந்தை முருகேசன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் கூத்தாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×