search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருணால் பாண்டியா"

    கடைசி ஓவரில் குருணால் பாண்டியாவை விளையாட விடாமல் செய்த தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    விஜய் சங்கர் 28 பந்தில 43, ரிஷப் பந்த் 12 பந்தில் 28, ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 21 ரன்கள் விளாசினர். டோனி 16-வது ஓவரின் 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டோனி ஆட்டமிழக்கும்போது கடைசி 28 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது.



    7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்தி உடன் இணைந்து குருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. தினேஷ் கார்த்திக் - குருணால் பாண்டியா 22 பந்தில் 52 ரன்கள் குவித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 24 ரன்னுடனும், குருணால் பாண்டியா 12 பந்தில் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள்தானே, இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பினர்.



    முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் இல்லை. அடுத்த பந்தை தூக்கியடித்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படவில்லை. ஆனால் ஈசியாக ஒரு ரன் எடுத்திருக்கலாம். குருணால் பாண்டியா ‘ஸ்ட்ரைக்கர்’ க்ரீஸ் நோக்கி ஓடினார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க வேண்டாம் என்று குருணால் பாண்டியாவை தடுத்தார்.

    இதனால் குருணால் பாண்டியா விரக்தியடைந்தார். ரசிகர்களுடன் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், குருணால் பாண்டியா ஏற்கனவே 19-வது ஓவரின் கடைசி பந்தில் இமாலய சிக்ஸ் விளாசியிருந்தார். இதனால் அதிக நம்பிக்கையில் இருந்தார்.

    3-வது பந்தில் ஒரு ஓடாததால் இந்தியாவுக்கு கடைசி 3 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்தையும் பவுண்டரிக்கு வெளியே அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-வது பந்தும் பேட்டிங் சரியாக படவில்லை. ஆனால், இந்த முறை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். கடைசி இரண்டு பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை குருணால் பாண்டியா தூக்கியடிக்க முயன்றார். ஆனால் ஒரு ரன்தான் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    கடைசி பந்தில் 12 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், வைடு மற்றும் சிக்ஸ் மூலம் இந்தியாவிற்கு 7 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.



    தினேஷ் கார்த்திக் அதீத நம்பிக்கையில் இருந்ததால் அவரை ‘திருவாளர் அதீத நம்பிக்கை’ என டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ஒருவேளை 3-வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுக்கு ஓடியிருந்து, 4-வது பந்தில் குருணால் பாண்டியா சிக்ஸ் அடித்திருந்தால், இந்தியாவுக்கு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். இப்படி நிகழ்ந்திருந்தால் நியூசிலாந்து பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பார். இதனால் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
    ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

    தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - தவான் ஜோடி 9.2 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.


    3 விக்கெட் வீழ்த்திய குருணால் பாண்டியா

    அடுத்து தவான் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். தவான் 31 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 8 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியா 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    அரைசதம் அடித்த ரோகித் சர்மா

    ரிஷப் பந்த் 28 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், எம்எஸ் டோனி 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 1-1 என சமநிலை செய்தது. 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 139-ல் சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

    பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து தவான் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது தவான் 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    விஜய் சங்கர் 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 4 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    டோனி 31 பந்தில் 39 ரன்களும், குருணால் பாண்டியா 18 பந்தில் 20 ரன்களும் அடிக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதி நடக்கிறது.
    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியாவுக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், குருணால் பாண்டியா இடம் பிடித்தனர். நியூசிலாந்து அணியில் மிட்செல் அறிமுகமானார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), தவான், டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார்.

    நியூசிலாந்து:- கொலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மிட்செல், கிராண்ட்ஹோம், சவுத்தி, சான்ட்னெர், ஸ்காட், சோதி, பெர்குசன்.

    டிம் செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக செய்பெர்ட் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் நியூசிலாந்து 4.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. டிம் செய்பெர்ட் 30 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்

    நியூசிலாந்து அணி 8.2 ஓவரில் 86 ரன்கள் சேர்த்திருந்தபோது கொலின் முன்ரோ 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். நியூசிலாந்து 10.2 ஓவரில் 100 ரன்னைத்தொட்டது.

    செய்பெர்ட் 43 பந்தில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84 ரனகள் குவித்து கலீல அகமது பந்தில் க்ளீன் போல்டானார். கேன் வில்லியம்சன் 22 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். என்றாலும் நியூசிலாந்து 200 ரன்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ராஸ் டெய்லர் 14 பந்தில் 2 சிக்சருடன் 23 ரன்கள் சேர்த்தார். கிராண்ட்ஹோம் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். ஸ்காட் அதிரடியாக விளையாடி 7 பந்தில் 20 ரன்கள் விளாச நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சாஹல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். #NZvIND
    வெலிங்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), தவான், டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், கலீல் அகமது, குருணால் பாண்டியா, புவனேஸ்வர்குமார்.

    நியூசிலாந்து:- கொலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், மிச்செல், கிராண்ட்ஹோம், சவுத்தி, சான்ட்னெர், ஸ்காட், சோதி, பெர்குசன். #NZvIND
    வெலிங்டனில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    ஒருநாள் தொடரை போலவே 20 ஓவர் தொடரிலும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஒருநாள் தொடரை வென்றது போல் ரோகித் சர்மா 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறார்.



    பேட்டிங்கில் தவான், தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும், பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வரிசையில் இருக்கும் ஹர்த்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.



    நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    வில்லியம்சன், கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.



    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா : - ரோகித் சர்மா (கேப்டன்), தவான், ஷுப்மான் கில், டோனி, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்டியா.

    நியூசிலாந்து:- வில்லியம்சன் (கேப்டன்), கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், டிம் செய்பெர்ட், சான்ட்னெர், சவுத்தி, கிராண்ட்ஹோம், சோதி, டிக்னெர், மிச்செல், ஸ்காட், பெர்குசன், பிரேஸ்வெல்.
    ரஞ்சி டிராபியில் ரெயில்வேஸ் அணிக்கெதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, அணியை 164 ரன்னில் வெற்றி பெற வைத்தார். #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் பரோடா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஐந்தாவது வீரராக களம் இறங்கிய குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 160 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பரோடா அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. குருணால் பாண்டியாவின் (4 விக்கெட்) நேர்த்தியான பந்து வீச்சால் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டது. 113 ரன்கள் முன்னிலையுடன் பரோடா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் பரோடா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ஆனால் குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 104 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பரோடோ 157 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ரெயில்வேஸ் அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ரெயில்வேஸ் அணி 2-வது இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது. இதனால் பரோடா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகபந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

    8.3 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ஆர்கி ஷார்ட்டை 33 ரன்னிலம், மேக்ஸ்வெல்லை 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட்டை டக்அவுட்டிலும் குருணால் பாண்டியா வெளியேற்றினார்.

    இதனால் 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஆஸ்திரேலியா. இறுதியில் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 25 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் 7 பந்தில் 13 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா 38 ரன்களும், புவி 33 ரன்களும், கலீல் அகமது 35 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இக்கட்டான நிலையில் விக்கெட் இழந்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.

    5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.



    ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
    மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கு 174 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.



    மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    பிரிஸ்பேன் போட்டியில் 6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை குருணால் பாண்டியா படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடனும், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளருடனும் களம் இறங்கியது.

    பும்ரா, புவி, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் குருணால் பாண்டியா, கலீல் அகமது பந்தை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். கலீல் அகமது 3 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் மூன்று சிக்சர் அடங்கும்.



    குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007-ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
    ×