search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் கொலை"

    கும்பகோணம் அருகே குடிபோதையில் மனைவியை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம், டிச.3-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஏராகரம் தட்டுமால் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (45). இவர்களுக்கு காசிநாதன் (7), சட்டநாதன் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

    இதேபோல் நேற்று இரவும் சுப்பிரமணியன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவரை ஜெயந்தி கண்டித்துள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் சுப்பிரமணியனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதையடுத்து போதையில் வெறியில் இருந்த அவர் , திடீரென வீட்டில் இருந்த கடப்பாரை கம்பியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கம்பியை வைத்து உடலில் குத்தினார்.

    இதனால் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறகு ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிபோதையில் மனைவி யை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. * * * சுப்பிரமணியன் * * * கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரை கம்பி. * * * கொலையுண்ட ஜெயந்தி

    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் ஆசிரியை வசந்தபிரியா, ஒரு வாலிபருடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    ஆசிரியை வசந்தபிரியா

    இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.

    அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×