search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமகன்"

    • மாநிலம் அரசு எடுக்கும் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
    • மற்ற நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உண்டு.

    மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது. இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தில வேலைப்பார்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜாவித் அகமது விமர்சித்திருந்தார்.

    அவர் இது தொடர்பாக தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினம், ஆகஸ்டு 14 பாகிஸ்தான் சுதந்திர தின வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

    இதனால் அவர் மீது மகாராஷ்டிர மாநில அரசு இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அப்போது உச்சநீதிமன்றம் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மற்றும் மாநிலங்கள் எடுக்கும் முடிவை விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதேபோல் மற்ற நாடுகள் அதனுடைய சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அந்த நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறம் உரிமையும் உண்டு" எனத் தெரிவித்து ஜாவித் அகமதுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    • குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் முகம் சுழிக்கின்றனர்.
    • மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    அபிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகிலேயே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என தொடர்ச் சியாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அகத்தாரிருப்பு, அச்சங்குளம், பள்ளபச்சேரி தீர்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் அபிராமம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் அபிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையில் குடித்து விட்டு தள்ளாடியபடி சுற்றி திரிகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது முகம் சுழித்தபடி உள்ளனர்.

    மேலும் அவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்களை தாக்கி தகராறு செய்கின்றனர். மேலும் போதையில் இருக்கும் ஆசாமிகளை கண்டிக்கவும் பலர் தயங்குகின்றனர். பலர் போதை தலைக்கேறி அரை குறை ஆடையுடன் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் முகம் சுழித்தபடி நிற்கின்றனர். இந்த நிலையில் போதையில் பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் தொல்லை கொடுத்து வரும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஸ் நிறுத்த பகுதியில் போதை ஆசாமிகள் திரியாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பி.ஏ. பி. பாசன திட்டம் என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வழியாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் கரைகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் குடிமகன்கள் அமர்ந்து தினசரி மது குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அவ்வாறு மது குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை அங்கேயே போட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. பல நேரங்களில் போதை தலைக்கேறிய நிலையில் குடிமகன்கள் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்களை வாய்க்காலின் உள்ளே வீசி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இங்கு மது குடிப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதனை தட்டி கேட்டால் அவர்களை எதிர்த்து பேசுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத அளவில் அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குடிமகன்கள் தினசரி இதனை வாடிக்கையாக கொண்டுள்ளதால் பி.ஏ.பி. வாய்க்கால் தற்காலிக பார்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே போலீசார் உடனடியாக இந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். சமூக விரோத செயல்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பாக இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடை முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார்.
    • சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிக கொண்டாட்டம்தான்.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் அதிகமாக குவிவது வழக்கம். புதுவையில் கிடைக்கும் விதவிதமான மதுவை வாங்கி அருந்துவர். இதுபோல மதுவுக்கு ஆசைப்பட்டு ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கண் கண்ணாடி அணிந்து வந்திருந்தார். பரபரப்பான மிஷன் வீதியில் காலணி தைக்கும் கடை விடுமுறை என்பதால் மூடி இருந்தது.

    அதன் முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார். சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார். பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றி கவலையின்றி தனக்குள்ளே பேசி கொண்டு அவர் மது குடிப்பதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.
    • உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு அனுமதியுடன் சாராய கடைகள் இயங்கி வருகின்றன.

    வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.

    உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

    கடை ஊழியர் மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தை வீடியோவாக எடுத்தவரிடம், எந்த வீடியோ எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, உரிமையாளரை கேட்டுவிட்டு மாற்றி தருகிறேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த குடிமகன் அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் கலால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கலால்துறை ஊழியர்கள் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×