search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாட்டு"

    • வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

    மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ×