search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் தடுப்பு முகாம்"

    • சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    அதன்படி வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஒவ்வொரு வாரமும் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

    முகாமில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்ப ட்டு தேவையான மாத்திரை மருந்து வழங்கப்பட்டு வந்தது.

    தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பால் அவதிப்ப ட்டவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த காய்ச்சல் முகம் வரும் டிசம்பர் 31-ந் தேதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இந்த அறிவிப்பை மாற்றி பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 42 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என சுகாதா ரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    அதன்படி வருகிற 1-ந் தேதியில் இருந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட, கண்டறி யப்பட்ட கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவையிலும் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 102 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கிறது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கிராம பகுதிகளில் இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ஒவ்வொரு முகாமுக்கு டாக்டர், நர்சு உள்பட 4 பேர் பணியில் இருப்பா ர்கள். முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட வர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்ப ட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். முகாமில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதவிர வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் தெரிவித்தார்.

    • காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.
    • 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

     மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.

    இதில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பூங்கொடிசண்முகம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×