search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காச நோய்"

    • முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.
    • ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, பொது சுகாதாரம் பற்றியும் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை குறித்து எடுத்து கூறினார். மேலும் ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் காசநோய் முகாமில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து பேசினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, இடைநிலை சுகாதார பணியாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • காசநோய் விழிப்புணர்வு முகாமிற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மாவட்ட நல கல்வி அலுவலர் மாரிமுத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்டதுணை இயக்குனர் காசநோய் பிரிவு டாக்டர் வெள்ளைச்சாமி பேசியபோது,

    தற்போது தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களில் சென்று ஆய்வு செய்தால் மிகப்பெரிய செலவினங்களால் பொதுமக்கள் பாதித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசின் சார்பிலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்வதற்காக இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் காச நோய் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு அந்த வாகனத்துடன் வந்து காசநோய் பரிசோதனை செய்யப்படும் எனவும், பரிசோதனை முடிவின்படி காசநோய் இருப்பது தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து காசநோயிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் எனவும், இதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.தொடர்ந்து காசநோய் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், முதல் நிலை காச நோய் மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார பார்வையாளர் ராம்திவ்யா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் வழங்கினார்
    • ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் சத்ய நாராயணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பொய்யா மொழி கலந்து கொண்டு காச நோயால் பாதிக்க ப்பட்டவர்கள் தொடர்ந்து 6 மாதத்திற்கு முழுமையாக மாத்திரை களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    மேலும் காசநோய் பரவும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு பச்சைபயிறு, வேர்கடலை; நாட்டுச்சக்கரை, கொண்டக்கடலை, அரிசி, முட்டை உள்ளிட்ட 11 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது களப்பணியாளர் சுமதி, சுகாதார பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

    ×