search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிழ்ந்து"

    • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

    அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

    வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விசாரணை

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
    • மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த 15 பெண்களும் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த 15 பெண்கள் வழக்கம்போல் இன்று காலை கோரைக்காடு பகுதியில் வெங்காயம் அறுவடை செய்வதற்காக மினிடெம்போவில் புறப்பட்டனர்.

    மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த மல்லிகா (40), லாவண்யா (19), சத்யா (30), ஜீவா (30) உள்பட 15 பெண்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக முகம், கை, கால், உள்ளிட்ட இடங்களில் அவர்கள் அடிபட்டது. அக்கம் , பக்கத்தினர், அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர்.
    • பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    வல்லம்:

    திருச்செந்தூரில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    பஸ்சை அம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார். நன்னிலத்தை சேர்ந்த‌ சிவா(வயது‌ 38) கண்டக்டராக இருந்தனர்.

    தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அரசு பஸ்சை புதுக்கோட்டையில் இருந்து சிவா ஒட்டிக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள வல்லம் அற்புதாபுரம் சோதனைச்சாவடி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி ஒன்று டீசல் போட்டு கொண்டு சாலையை கடந்துள்ளது.

    அப்போது தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருக்க திடிரென‌ பிரேக் போட்டுள்ளார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று பஸ்சில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இதில் காயம் அடைந்த வெங்கடேஷ், மாலா, சுப்ரமணியன், பிருத்திகா, சாந்தி உள்ளிட்ட 11 ேபர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (38) கரும்பு லோடு ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று மதியம் 2.30 மணி அளவில் கிளாம்பாடி இரும்பு பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.

    இதில் ஓட்டுநர் பாலசுப்பிரமணினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    • சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்பு பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது.
    • இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

    மதுரை

    மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு மாடக்குளம் பெரியார் நகர் வழியாக, பழங்காநத்தம் நோக்கி ஒரு சிவப்பு நிற கார் அதிவேகமாக சென்றது.

    அப்போது மாணவர் விடுதி அருகே நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. எனவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது கார் டிரைவர் சிறிய காயங்களுடன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டிரைவர் யாருக்கோ போன் செய்ய, அடுத்த 10 நிமிடங்களில் நண்பர்கள் குழு புறப்பட்டு வந்தது. அவர்கள் போலீசார் வருவதற்குள் காரை அப்புறப்படுத்தி, புறப்பட்டுச் சென்று விட்டனர்.

    சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பள்ளிபாளையம்:

    திருச்செங்கோட்டில் இருந்து நூல்பாவு ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று பள்ளிபாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்துக்கு வந்தது. பள்ளிபாளையம் அலமேடு அருகே மேம்பால கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

    இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சேற்றில் சரக்கு வேன் சிக்கி, கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நூல்பாவுகளை அப்புறப்படுத்தி, சரக்கு வேனை மீட்டனர். இதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    ×