search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் நிர்மல்ராஜ்"

    திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் “வயர்லெஸ்” கருவிகளை போலீசார் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்ற பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஆறுகளில் நீர் வரத்தை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகளையும் வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீர் அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால் கரைகளின் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் 214 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்டல அளவில், வட்டார அளவில் அலுவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி, சேங்காலிபுரம்,வடவேர் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்திற்குட்பட்ட நரசிங்கம்பேட்டை பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தினசரி குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவது குறித்து கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சேங்காலிபுரம் ஊராட்சி அக்ரகாரம் பகுதியில் பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து தெருவிளக்குகள், தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தன கோபால கிருஷ்ணன், பொற்செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் தினசரி குடிநீர் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பின்னர் நீர்முள்ளிநெடுஞ்சேரி உட்கிராமத்தில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், குடியிருப்பு வீடுகளில் தனிநபர் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பனங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைத்து தங்குதடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, தாசில்தார் பரஞ்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவாரூர் அருகே அரசு பள்ளியில் நடந்த யோகா பயிற்சியில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.
    திருவாரூர்:

    சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாரூர் அருகே விளமலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் யோகா பயிற்றுனர் பல்வேறு ஆசனங்கள் செய்து காண்பித்தார். அதனை பின்பற்றி கலெக்டர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் யோகா செய்தனர். இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில்,

    யோகா பயிற்சி மேற்கொள்வதால் ஞாபக சக்தி, ரத்த ஓட்டம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சிறப்பாக செயல்படும். மேலும் உடல் நலம், மன வளம் மேன்மை அடையும். எனவே அனைத்து தரப்பு மக்களும் யோகாவினால் பல பயன்கள் பெறமுடியும் என்பதால் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என கூறினார். இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி நடைபெற்றது.

    மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி, அரசினர் கலைக்கல்லூரி ஆகியவற்றின் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது. இதில் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சி முறை குறித்த கையேடுகளை சுபைதார் ஜெயசீலன் மாணவர்களுக்கு வழங்கினார். முன்னதாக பின்லே தேசிய மாணவர் படை அதிகாரி டேனியல் ராஜாஜி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அதிகாரி திவாகர் செய்து இருந்தார். முடிவில் அரசினர் கலைக்கல்லூரி என்.சி.சி. அதிகாரி ராஜன் நன்றி கூறினார்.
    திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட இலவச தாய், சேய் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் இலவச தாய், சேய் வாகன சேவையானது, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சேவை வாகனம் மூலம் அரசு தாய், சேய் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவர்களது இல்லத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும், குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறது. இந்த சேவை பயன்படுத்தி கொள்ள இலவச தொலைபேசி 102 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×