search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பழிப்பு புகார்"

    பேஸ்புக் வீடியோவில் போலி கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் அமல் பேதி. தனது பேஸ்புக்கில் 12 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் என்றும், தான் வங்கியில் பணிபுரிந்த போது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும், பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

    இது எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் இளம் பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 140 நாட்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டதால் எஞ்சிய நாட்களை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசிய கருத்து சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது. #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார், ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுகிறார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



    சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் கேரள தலைவர் ரேகா ஷர்மா, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவாமல், எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்துக்களை கூறியிருப்பது கண்டு வெட்கப்படுகிறேன். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதப்படும்’ என தெரிவித்துள்ளார். #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    உத்தரப்பிரதேசத்தில் போலி கற்பழிப்பு புகாரில் பல வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்த சகோதரர்கள் 2 பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த சகோதரர்கள் சாம்சிங், ஜெய்சிங். இவர்களது உறவு பெண் ஒருவர் சகோதரர்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

    2001-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சகோதரர்கள் இருவரும் தன்னை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டுக்கு இழுத்து சென்றதாகவும், அங்கு வைத்து அவர்கள் கற்பழித்ததாகவும் புகாரில் கூறி இருந்தார்.

    இரு வாலிபர்களும் எனது கைகளை கட்டிப்போட்டு விட்டு அவர்களின் தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் கற்பழித்தனர் என்றும் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு முதலில் பரிதாபாத் முதன்மை கோர்ட்டில் நடந்தது. அதில், இருவரையும் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால், அந்த பெண் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது மறுபடியும் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு விசாரணை நடத்தி 2011-ம் ஆண்டு சகோதரர்களில் சாம்சிங்குக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெய்சிங்குக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கியது.

    ஐகோர்ட்டில் அப்பீல் செய்த போது அந்த கோர்ட்டும் கீழ் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தது. இதனால் 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் ரமணா, மோகன் சந்தான கவுடர் ஆகியோர் குற்றவாளிகள் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டனர்.

    மேலும் அந்த பெண் போலியாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். இதை சரியாக விசாரிக்காமல் போலீசார் வழக்கு ஜோடித்துள்ளனர் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

    சகோதரர்களில் ஒருவர் கோர்ட்டில் கூறும் போது, நான் அந்த பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தேன். மேலும் அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் சுற்றினார். இதனால் அவரை தாக்கினேன். இந்த கோபத்தில் தான் எங்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்துவிட்டார். ஆனால், நாங்கள் அவரை கற்பழிக்கவே இல்லை என்று சொன்னார்.

    இதை நீதிபதிகள் ஏற்று கொண்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது:-

    இரு வாலிபர்களும் தங்களது தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் தன்னை கற்பழித்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார். எந்தவொரு ஆணும் தங்களது மனைவி, தாயார், குழந்தைகள் முன்னிலையில் இன்னொரு பெண்ணை கற்பழிக்க வாய்ப்பு இல்லை.

    அடுத்ததாக அந்த பெண் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. அவர் உடலில் காயம் ஏற்பட்டதாகவோ, வாலிபர்களின் உயிரணுக்கள் கிடைத்ததாகவோ, மற்ற அடையாளங்களோ இல்லை.

    எனவே, இது கற்பழிப்பு அல்ல, அந்த பெண் போலியாக புகார் கொடுத்து இருக்கிறார். போலீசாரும் அதை மேற்கொண்டு ஜோடித்திருக்கிறார்கள். இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    ஆனால், இவர்களில் ஜெய்சிங் ஏற்கனவே 7 ஆண்டு ஜெயில் தண்டனையை முடித்து விடுதலையாகி விட்டார். சாம்சிங் 10 ஆண்டு ஜெயில் தண்டனையில் 7 ஆண்டை முடித்திருந்தார். அவரை உடனடியாக விடுவித்துள்ளனர்.

    ஆனாலும், செய்யாத குற்றத்துக்காக அவர்கள் இருவரும் பல ஆண்டு ஜெயில் தண்டனையை அனுபவித்துள்ளனர்.
    உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பம் அடைந்த இளம்பெண் பிளாஸ்டிக் பையில் கலைக்கப்பட்ட 5 மாத கருவுடன் காவல் நிலையத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். #WithFoetusInBag #WomanGoesToCops
    லக்னோ:

    திருமண ஆசை காட்டியும், கட்டாயப்படுத்தி மிரட்டியும் இளம்பெண்களை தங்களது ஆசைக்கு பயன்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நமது நாட்டில் அதிகரித்துகொண்டே வருகிறது. சமீபகாலமாக ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுவதாக குற்றவியல் துறை புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 6 மாதங்களுக்கு முன்னர் திருமண ஆசைகாட்டி பலவந்தப்படுத்தி கற்பழித்த அவளது காதலன், பின்னாளில் அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதை அறிந்தான்.

    இப்போதும், பலவந்தப்படுத்தி மருந்துகளை கொடுத்து அந்த கருவை அழித்துள்ளான். இதனால், மன நிம்மதியை இழந்த அந்த இளம்பெண் கலைக்கப்பட்ட கருவை ஒரு பிளாஸ்டிக் உறையில் போட்டு எடுத்துவந்து தன்னை காதலித்து துரோகம் செய்த நபரின்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த சம்பவமும் அந்த பெண்ணின் துணிச்சலும் அம்ரோஹா பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WithFoetusInBag #WomanGoesToCops 
    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மகன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா. இவருடைய மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு கற்பழித்து விட்டதாக 28 வயது பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தனது நற்பெயரை சீர்குலைக்க சமாஜ்வாடி கட்சி தீட்டிய சதி இது என்று ரோஷன்லால் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    ×