search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chief minister yogi adityanath"

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மகன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா. இவருடைய மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு கற்பழித்து விட்டதாக 28 வயது பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தனது நற்பெயரை சீர்குலைக்க சமாஜ்வாடி கட்சி தீட்டிய சதி இது என்று ரோஷன்லால் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    ×