search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலைக்கப்பட்ட 5 மாத கருவுடன் காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்த இளம்பெண்
    X

    கலைக்கப்பட்ட 5 மாத கருவுடன் காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்த இளம்பெண்

    உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பம் அடைந்த இளம்பெண் பிளாஸ்டிக் பையில் கலைக்கப்பட்ட 5 மாத கருவுடன் காவல் நிலையத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். #WithFoetusInBag #WomanGoesToCops
    லக்னோ:

    திருமண ஆசை காட்டியும், கட்டாயப்படுத்தி மிரட்டியும் இளம்பெண்களை தங்களது ஆசைக்கு பயன்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நமது நாட்டில் அதிகரித்துகொண்டே வருகிறது. சமீபகாலமாக ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பெண்கள் பலவந்தமாக கற்பழிக்கப்படுவதாக குற்றவியல் துறை புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 6 மாதங்களுக்கு முன்னர் திருமண ஆசைகாட்டி பலவந்தப்படுத்தி கற்பழித்த அவளது காதலன், பின்னாளில் அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதை அறிந்தான்.

    இப்போதும், பலவந்தப்படுத்தி மருந்துகளை கொடுத்து அந்த கருவை அழித்துள்ளான். இதனால், மன நிம்மதியை இழந்த அந்த இளம்பெண் கலைக்கப்பட்ட கருவை ஒரு பிளாஸ்டிக் உறையில் போட்டு எடுத்துவந்து தன்னை காதலித்து துரோகம் செய்த நபரின்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த சம்பவமும் அந்த பெண்ணின் துணிச்சலும் அம்ரோஹா பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WithFoetusInBag #WomanGoesToCops 
    Next Story
    ×