என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவர் மது பழக்கம்"
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.
அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தச்சு தொழிலில் கிடைக்கும் பணத்தை வீட்டில் குடும்ப செலவுக்கு சரிவர கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரமேஸ்வரி அவரை கண்டித்தார். வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குகூட பணம் தராமல் இப்படி மது குடித்து வந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது என கூறி சத்தம் போட்டார்.
இதனால் நேற்றும் இருவருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி, இனிமேல் கணவருடன் வாழ்வதைவிட, சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவி எரிந்தது. இதனால் வலியால் பரமேஸ்வரி சத்தம் போட்டப்படி அங்கும், இங்குமாக ஓடினார். அவரது அலறலை கேட்ட, அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக பரமேஸ்வரியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரமேஸ்வரிக்கு முகம், தலை, கை, கால் உள்ளிட்ட இடங்கள் தீயில் கருகியது. உயிருக்கு ஆபத்ததான நிலையில் உள்ள அவருக்கு தீ காயம் பிரிவில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதற்கிடையே ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அது போல் நேற்று மாலை ரவி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரவி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து ரவி வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ரவி ஜன்னல் வழியாக பார்த்த போது மின் விசிறியில் சேலையால் வள்ளி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து வள்ளியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்