search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl self immolation"

    வாழப்பாடி அருகே கணவர் மது குடித்து செலவழித்து வந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.

    அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தச்சு தொழிலில் கிடைக்கும் பணத்தை வீட்டில் குடும்ப செலவுக்கு சரிவர கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பரமேஸ்வரி அவரை கண்டித்தார். வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குகூட பணம் தராமல் இப்படி மது குடித்து வந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது என கூறி சத்தம் போட்டார்.

    இதனால் நேற்றும் இருவருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி, இனிமேல் கணவருடன் வாழ்வதைவிட, சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவி எரிந்தது. இதனால் வலியால் பரமேஸ்வரி சத்தம் போட்டப்படி அங்கும், இங்குமாக ஓடினார். அவரது அலறலை கேட்ட, அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக பரமேஸ்வரியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமேஸ்வரிக்கு முகம், தலை, கை, கால் உள்ளிட்ட இடங்கள் தீயில் கருகியது. உயிருக்கு ஆபத்ததான நிலையில் உள்ள அவருக்கு தீ காயம் பிரிவில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாபநாசம் அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் துர்கா (வயது 20). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் துர்கா , வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்காவை அவரது தாய் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துர்கா , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா நேற்று இறந்தார்.

    இதுபற்றி பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×