என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவர் சரண்"
- கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கோபி:
சேலம் சின்னசீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிபேட்டை கோவில் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது லட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் 2-வது கணவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடிவந்தனர்.
இதற்கிடையே ரகு கோபி செட்டிபாளையம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்