search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சமத்துவபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொன்ற 2-வது கணவர் கோபி கோர்ட்டில் சரண்
    X

    சேலம் சமத்துவபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொன்ற 2-வது கணவர் கோபி கோர்ட்டில் சரண்

    • கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    கோபி:

    சேலம் சின்னசீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிபேட்டை கோவில் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது லட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் 2-வது கணவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடிவந்தனர்.

    இதற்கிடையே ரகு கோபி செட்டிபாளையம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.

    Next Story
    ×