search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் மூடல்"

    • கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
    • கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு உள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங் களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று 3- ம் நாள் என்பதால் வீடுகள் மற்றும் வெளியில் சிலைகள் வைத்து வழிபட்டவர்கள் கடல் மற்றும் ஆறுகள் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஐதீகத்தை முன்னிட்டு ஊர்வலமாக வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வ–லத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சேத்தியா தோப்பு காட்டு மன்னார்கோவில், நடுவீரப் பட்டு, திட்டக்குடி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று 2- ந்தேதி 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 4- ந் தேதி மாவட்டம் முழுவதும் இதேபோல் ஒரு சில டாஸ்மாக் கடையில் மூடப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    திண்டுக்கல் நகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இன்று காலைமுதல் அடைக்கப்பட்டிருந்தது. மவுன்ஸ்புரம் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் கடைவாசல் முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுர ங்களை ஒட்டி போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அரிசி ஆலை மண்டி மற்றும் கடை உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கனி தெரிவிக்கை யில், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பட்டியலில் உள்ள அரிசிக்கு வரி விதிக்கப்பட்டால் இதன் விலை மேலும் உயரும். ஏற்கனவே வியாபாரிகள் பல்வேறு நெருக்கடிக்கு இடையில் அரிசி ஆலைகள் நடத்தி வருகின்றனர். கூடுதல் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்க ப்படுவார்கள்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த வரிவிதிப்பை மறுபரிசீலனை ெசய்ய வேண்டும் என்றனர்.

    ×