search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் கொந்தளிப்பு"

    • 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி மீன்பிடிக்க சென்றபோது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதே போன்று கடந்த மாதம் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப் படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

    64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற மீனவர்கள் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை முதல் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பானது. ஆனாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று குறைந்த அளவே மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை பரமக்குடி, திருவாடானை, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    • தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.
    • சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று புயலாக மாறி உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை 25-ந்தேதி அதிகாலை வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக ராமநாதபுரம் ராமேசுவரத்தில் புயல் எதிரொலியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்லவில்லை. நாட்டு படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    ஹாமூன் புயல் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புயல் மேலும் வலு பெற்றதையடுத்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது புயல் தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்றால் சாலைகள் முழுவதும் மணல் மூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    • 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைகாற்று வீசி வருகிறது. இன்றும் கடற்பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • 2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களையொட்டி உள்ள வங்கக்கடலில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடற்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்திருந்தது.

    இதன் காரணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மாரியூர், முந்தல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 1750 விசைப்படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடற்கரையில் 2-வது நாளாக ஓய்வெடுத்தன.

    வானிலை மாற்றம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

    குறிப்பாக இலங்கை கடற்படையினரின் தொல்லை காரணமாக 100 சதவீத அளவில் மீன்பிடிக்க முடிவதில்லை. தற்போது வானிலையும் சாதகமாக இல்லாததால் 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பம் நடத்த வருமானமின்றி தவிக்கிறோம் என்றனர்.

    • ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
    • கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    இதனால் ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 4-ம் நாளான இன்றும் ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது.

    கடலில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் போன்ற பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    4-வது நாளாக தொடரும் இந்த தடையால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சில நேரங்களில் கடல் உள் வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றது.

    • ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படைகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல் முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் தடைபட்டுள்ளதால் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலைகளை மணல்கள் மூடின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தனுஷ்கோடியில் இறங்கி குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு கடந்த 3 மாத காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்து தற்போது தான் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறோம். இதனிடையே இலங்கை கடற்படை தொல்லையால் முழுமை யாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடிவதில்லை. தற்போது இயற்கையும் எங்களை வஞ்சித்துள்ளது. இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது. வானிலை மாற்றம், புயல் போன்ற காலங்களில் கடலுக்கு செல்லாதபோது மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

    ×