search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு: 4-வது நாளாக வீட்டில் முடங்கிய ராமேசுவரம் மீனவர்கள்
    X

    இன்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு: 4-வது நாளாக வீட்டில் முடங்கிய ராமேசுவரம் மீனவர்கள்

    • ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
    • கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    இதனால் ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 4-ம் நாளான இன்றும் ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது.

    கடலில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் போன்ற பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    4-வது நாளாக தொடரும் இந்த தடையால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சில நேரங்களில் கடல் உள் வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றது.

    Next Story
    ×