search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்று"

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை.
    • சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், குமாரபுரம், பழவூர், ராதாபுரம், காவல்கிணறு, வடக்கன்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூவும் விற்பனைக்காக வருகிறது.

    மேலும் சேலத்தில் இருந்து சிவப்பு அரளியும், வெள்ளை அரளி பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்தும், மஞ்சள் கேந்தி மற்றும் பட்டர்ரோஸ் தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதியிலிருந்தும், குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள குளங்களின் மூலம் தாமரை பூவும், தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பங்கி, கோழி கொண்டை, அருகம்புல், மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு பூக்கள் தோவாளை சந்தைக்கு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும், கேரளாவுக்கும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி இல்லை. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. ஆனால் சுப காரியங்களும், திருமண நிகழ்ச்சிகளும் அதிகமாக இருப்பதால் பூக்களுடைய தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை. இதனால் அதன் விலை உயர்ந்து ஒரு பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கிலோ ஒன்றிற்கு பூக்களின் விலை வருமாறு:-

    மல்லிகை ரூ.1500, பிச்சி ரூ.1,550, சம்பங்கி ரூ.80, மஞ்சள் கேந்தி ரூ.65, சிவப்பு கேந்தி ரூ.65, பட்டர் ரோஸ் ரூ.130, பன்னீர் ரோஸ் ரூ.90, கோழிப்பூ ரூ.50, வாடாமல்லி ரூ. 60, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.30.

    ×