search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை மார்க்கெட்டில் தாமரை பூ ஒன்று ரூ.30-க்கு விற்பனை
    X

    பூக்கள் விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம் 

    தோவாளை மார்க்கெட்டில் தாமரை பூ ஒன்று ரூ.30-க்கு விற்பனை

    • கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை.
    • சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், குமாரபுரம், பழவூர், ராதாபுரம், காவல்கிணறு, வடக்கன்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூவும் விற்பனைக்காக வருகிறது.

    மேலும் சேலத்தில் இருந்து சிவப்பு அரளியும், வெள்ளை அரளி பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்தும், மஞ்சள் கேந்தி மற்றும் பட்டர்ரோஸ் தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதியிலிருந்தும், குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள குளங்களின் மூலம் தாமரை பூவும், தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பங்கி, கோழி கொண்டை, அருகம்புல், மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு பூக்கள் தோவாளை சந்தைக்கு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும், கேரளாவுக்கும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி இல்லை. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. ஆனால் சுப காரியங்களும், திருமண நிகழ்ச்சிகளும் அதிகமாக இருப்பதால் பூக்களுடைய தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை. இதனால் அதன் விலை உயர்ந்து ஒரு பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கிலோ ஒன்றிற்கு பூக்களின் விலை வருமாறு:-

    மல்லிகை ரூ.1500, பிச்சி ரூ.1,550, சம்பங்கி ரூ.80, மஞ்சள் கேந்தி ரூ.65, சிவப்பு கேந்தி ரூ.65, பட்டர் ரோஸ் ரூ.130, பன்னீர் ரோஸ் ரூ.90, கோழிப்பூ ரூ.50, வாடாமல்லி ரூ. 60, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.30.

    Next Story
    ×