என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏ.ஐ.டி.யூ.சி"
- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
- கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தல்.
தஞ்சாவூர்:
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தஞ்சாவூர் அரசு போக்குவரத்து நகர்1 கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ மத்திய சங்கப் பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஐ.என்டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
- அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
- தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் சமூக பதட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, ஏஐடியூசி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
வலைதளங்களில் தமிழா்களை வடமாநிலத் தொழிலாளா்கள் விரட்டிவிரட்டித் தாக்குகிறாா்கள் என்ற செய்தி திட்டமிட்டு பரப்பபட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதுடன், திருப்பூரின் தொழிலும், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.
திருப்பூா் மாநகரில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தொழிலாளா்களை முறைப்படுத்தும் வகையிலும், அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். திருப்பூரில் சமூக பதட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்