search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் மரணம்"

    கே.கே.நகரில் என்ஜினீயர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, கே.கே.நகர், ராமசாமி சாலையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது34). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் இளங்கோவன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் கத்தியால் குத்தப்பட்ட என்ஜினீயர் பரிதாபமாக உயிரிந்தார். இதையடுத்து மனைவி, காதலன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

    கடந்த 13-ந்தேதி மாலை இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது மர்ம வாலிபர் கதிரவனை கத்தியால் குத்தி விட்டு அனிதா அணிந்து இருந்த நகையை பறித்துச் சென்றார்.

    போலீசார் விசாரணையில் அனிதாவே தனது காதலனான அந்தோணி ஜெகனை ஏவி கணவரை தாக்கியது தெரிந்தது.

    அந்தோணி ஜெகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் பதுங்கி இருந்த அந்தோணி ஜெகன் மற்றும் அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கதிரவன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கதிரவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கதிரவன் இறந்ததையடுத்து அவரது மனைவி அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அனிதா திருமணத்திற்கு முன்பே அந்தோணி ஜெகனை காதலித்தார். பெற்றோரின் வற்புறுத்தலால் என்ஜினீயர் கதிரவனை திருமணம் செய்தார். எனினும் அவர் மீது விருப்பம் இல்லாத அனிதா காதலன் அந்தோணி ஜெகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டார்.

    இதற்காக திருவான்மியூர் கடற்கரைக்கு கணவரை அழைத்து வந்து கண்ணை கட்டி கண்ணாம்மூச்சி ஆடி திட்டத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

    திருமணம் ஆன நாள் முதலே அனிதா, கணவர் கதிரவனை தீர்த்து கட்ட முடிவு செய்தததாக தெரிகிறது. இந்த கொலை திட்டத்துக்கு வேறு யாரேனும் உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து சிறையில் உள்ள அனிதாவையும், காதலன் அந்தோணி ஜெகனையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளையும் வி‌ஷம் கொடுத்து கொன்றார். கணவரையும் வி‌ஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. தற்போது அனிதா, காதலனுக்காக கணவரை திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரை சுட்டுக் கொன்ற போலீஸ்கார் கைது செய்யப்பட்டார். #policemanarrest

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). என்ஜினீ யரான இவர் மல்டி நே‌ஷனல் கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவரை ஆடம்பர சொகுசு காரில் அழைத்து வந்தார். லக்னோவின் புற நகரான கோம்தி நகர் விரிவாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு ரோந்து சென்ற 2 போலீசார் அவரது காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டார். அதில் விவேக் திவாரி மீது குண்டு பாய்ந்தது.

    உடனே அவரை லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் பிரசாந்த்குமார் மற்றும் உடன் இருந்த மற்றொரு போலீஸ் காரரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றனர். பின்னர் எங்களது மோட்டார்சைக்கிள் மீதும், எங்கள் மீதும் காரை ஏற்ற முயன்றனர்.

    காரை விட்டு வெளியே வரும்படி கூறினோம். வர மறுத்து மீண்டும் காரை ஏற்ற முயன்றார். இதனால் கீழே விழுந்த நான் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என தெரிவித்தார். #policemanarrest

    ×