search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸல்"

    • எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    இதில் எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    எக்ஸல் பொறி யியல் கல்லூரி முதல்வர் பொம்ம ண்ண ராஜா, எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கி டெக்சர் ரூபிளானிங் முதல்வர் பாலமுருகன், எக்ஸல் கல்வியியல் கல்லூரி முதல்வர் சைமன் அருண் பாரத்குமார் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கலை மகள் ஆகியோர் ஆண்ட றிக்கை வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சவுகட்டசென் பேசும் போது, மாணவர்கள் கல்லூரி படிப்பினை வெற்றி கரமாக முடித்து வேலை வாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள வழங்கினார்.

    தெடர்ந்து நடிகர் சதிஷ் பேசும் போது சகஜமாகவும், யதார்த்தமாகவும் மாணவர்களுக்கு நற்பண்புகள், நற்கருத்துக்களையும், வாழ்வில் வெற்றி பெற சிறந்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் விடா முயற்சி நேர்மறையாக சிந்திக்க வும் கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் வரிசையில் முன்னிலை வகித்தவர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கி னர்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸல் பொறியியல் கல்லூரி அட்மினிஸ்ட ரேஷன் இயக்குனர் (பொறுப்பு) அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், கல்வியியல் கல்லூரி, கந்தசாமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எக்ஸல் கல்வி குழும அலுவலர்கள் செய்தி ருந்தனர்.

    ×