search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கர்ப்பம்"

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வீட்டில் குறை பிரசவத்தால் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
    • இளம்பெண் தனது வீட்டு அருகே யாருக்கும் தெரியாத வகையில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்துள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் மாடு மேய்த்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஊர் பெரியவர் கிருஷ்ணன் (66) கணவருடன் சேர்த்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். பின்னர் பலமுறை அவரை மிரட்டி கற்பழித்தார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வீட்டில் குறை பிரசவத்தால் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

    இதை தொடர்ந்து அந்த இளம்பெண் தனது வீட்டு அருகே யாருக்கும் தெரியாத வகையில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் தந்தை திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இளம்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    இதுகுறித்து திருவள்ளூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்து திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • மணியரசுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானது.
    • மணியரசு வக்கீல் ஒருவர் மூலமாக போலீசில் சரண் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நூலக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணியரசு. 29 வயதான இவர் திருச்சியை சேர்ந்தவர்.

    இவர் சட்ட பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து திருமண ஆசை காட்டி மணியரசு, பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இரண்டு முறை அவர் கர்ப்பமானார். இதுபற்றி கேட்டு தன்னை திருமணம் செய்ய பெண் ஊழியர் வற்புறுத்தி உள்ளார்.

    ஆனால் திருமணம் செய்ய மறுத்த மணியரசு கர்ப்பத்தை கலைத்து விடுவோம். பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இதன்படி காதலியான பெண் ஊழியரின் கர்ப்பத்தையும் மணியரசு கலைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மணியரசுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பெண் ஊழியர் அவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது மணியரசு திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்துளார். இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஐ.பி.சி. சட்ட பிரிவுகளான 376 (கற்பழிப்பு), 312-(கர்ப்பத்தை கலைத்தல்), 417-(ஏமாற்றுதல்), 506(2)-(கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளில் மணியரசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மணியரசு வக்கீல் ஒருவர் மூலமாக நேற்று போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் மணியரசுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
    • கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

    கடலூர்:

     பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). ஆட்டோ ஓட்டி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி (25). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

    அதிர்ச்சி அடைந்த கனிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ள சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை செய்து சக்திவேலை கைது செய்தார்.

    ×