search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கண் பரிசோதனை"

    • முகாமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம் துவக்கி வைத்தார்.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருப்பூர் தி ஐ பவுண்டேசன் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.இந்த முகாமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம் துவக்கி வைத்தார் .இந்த முகாமிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எபிசியண்ட் மணி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த முகாமில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் நகர தலைவர் பி.ஏ.சாதிக் அலி,இளைஞரணி மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சிராஜ்தீன், மங்கலம் நகர செயலாளர் முஹம்மது ரபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாவட்ட துணைச்செயலாளர் மலங்ஷா மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
    • முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனு கொடுக்க வந்தவர்கள் மற்றும் அவருடன் வந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அரிமா ரவிசந்திரன்-வித்யா ரவிசந்திரன் தம்பதியரின் மகள் சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை நினைவு முகாம் சென்னையில் 6-வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள காவேரி அரசு பள்ளியில் அரிமா ரவிசந்திரன்-வித்யா ரவிசந்திரன் தம்பதியரின் மகள் சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    திருவான்மியூர் அரிமா சங்கம், சென்னை ஆற்காடு சாலை அரிமா சங்கம், மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் பொதுமக்க ளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. முகாமை ஏ.எம். வி. பிரபாகர்ராஜா எம்.எல். ஏ. தொடங்கி வைத்தார். இந்த கண் சிகிச்சை நினைவு முகாம் சென்னையில் 6-வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

    நிகழ்ச்சியில் அரிமா சங்க மாநில தலைவர் இளங்கோ மாணிக்கம், வட்டார தலைவர் என்.எஸ். பாலசுப்ரமணியம், ஆர்.ராஜ்குமார், செயலாளர் ஜி.ரவி, ஆர்.ரகுநந்தன், எம்.எஸ்.பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×