search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டெல்"

    • விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.
    • டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், புகழ் பெற்ற சிப் டிசைனருமான அவ்தார் சைனி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    செம்பூரில் வசிக்கும் சைனி தன்னுடன் சைக்கிள் ஓட்டும் குழுவுடன் இணைந்து இன்றும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நெருள் ஜன்ஷன் மற்றும் என்.ஆர்.ஐ. சீவுட்ஸ் சிக்னல் அருகே இன்று காலை 5.50 மணிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

    நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சைனி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.

     

    விபத்தில் சிக்கிய சைனியை அங்கிருந்தவர்கள் டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், மருத்துவர்கள் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். எனினும், அங்கிருந்தவர்கள் ஓட்டுனரை துரத்தி பிடித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்.ஆர்.ஐ. கடலோர காவல் துறை ஆய்வாளர் சதீஷ் கடம், "குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுனர், ரிஷிகேஷ் காடே மீது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது."

    "ஓட்டுனர் கைது செய்யப்படவில்லை, எனினும், தொடர் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சைனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    68 வயதான சைனி இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இன்டெல் 386 மற்றும் இன்டெல் 486 மைக்ரோ-பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து பென்டியம் பிராசஸரை வடிவமைக்கும் குழுவை சைனி நிர்வகித்து வந்தார்.

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    ×