என் மலர்
நீங்கள் தேடியது "இன்டெல்"
- இன்டெலின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது.
- இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பொருளாதரத்தை உயர்த்துவதாக கூறி மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல நாடுகளிடம் இருந்து கண்டனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் வணிகத்தில் 10 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த நிறுவனமும், அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு ஈடாக இன்டெல் நிறுவனம் வாஷிங்டனுக்கு ஒரு பங்கு பங்கை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியதை அடுத்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க அரசாங்கம் 433.3 மில்லியன் பொதுவான பங்குகளைப் பெறும். இது இன்டெல் நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகள் ஆகும். இது குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
இதன்மூலம் இன்டெலின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த வருடம் 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது.
- அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் ஜூலை மாதத்தில் 5 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு திட்டம், நிதி இழப்பை சரி செய்தல் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, ஒரேகான், அரிசோனா, டெக்சாஸ் மாகாணங்களில் வேலைப் பார்க்கும் பொறியாளர்கள், மூத்த தலைவர்கள் (Senior Leaders), அலுவலக ஸ்டாஃப்கள் வேலை இழப்பை சந்திக்க இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் தற்போது 5 ஆயிரம் பேரை நீக்குகிறது.
ஒரேகான் அலுவலகத்தில் இருந்து மட்டும் 2,392 பேரை நீக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக 500 பேரை நீக்க திட்டமிட்ட நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கலிபோர்னியா அலுவலகத்தில் 1,935 பேரை நீக்குகிறது.
சிப் டிசைன், கிளவுட் சாஃப்ட்வேர் (Cloud Software), யுனிட் தயாரிப்பு பிரிவில் உள்ள பொறியாளர்கள் இந்த வேலை நீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
- இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.
சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.
- டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், புகழ் பெற்ற சிப் டிசைனருமான அவ்தார் சைனி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
செம்பூரில் வசிக்கும் சைனி தன்னுடன் சைக்கிள் ஓட்டும் குழுவுடன் இணைந்து இன்றும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நெருள் ஜன்ஷன் மற்றும் என்.ஆர்.ஐ. சீவுட்ஸ் சிக்னல் அருகே இன்று காலை 5.50 மணிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சைனி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய சைனியை அங்கிருந்தவர்கள் டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், மருத்துவர்கள் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். எனினும், அங்கிருந்தவர்கள் ஓட்டுனரை துரத்தி பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்.ஆர்.ஐ. கடலோர காவல் துறை ஆய்வாளர் சதீஷ் கடம், "குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுனர், ரிஷிகேஷ் காடே மீது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது."
"ஓட்டுனர் கைது செய்யப்படவில்லை, எனினும், தொடர் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சைனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.
68 வயதான சைனி இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இன்டெல் 386 மற்றும் இன்டெல் 486 மைக்ரோ-பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து பென்டியம் பிராசஸரை வடிவமைக்கும் குழுவை சைனி நிர்வகித்து வந்தார்.
- அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது.
- அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் சேமிக்கும்.
இன்டெல் நிறுவனம் தொழில்நுட்ப துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான என்விடியா (NVIDIA) மற்றும் ஏஎம்டி (AMD) உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முழுக்க தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமாராக ரூ. 8.28 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏஐ துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.






