search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பி"

    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் ரகானேவின் அபாரமான சதத்தால் இந்தியா ‘சி’ அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. #DeodharTrophy #Rahane #shreyasIyer
    தியோதர் டிராபி இறுதிப் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கு எதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகானே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    அதன்பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால் இறங்கினர்.



    மயங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடினார். கெய்க்வாட், அய்யர் ஆகியோர் சேர்ந்து 116 ரன்கள் ஜோடி சேர்த்தனர். கெய்க்வாட்60 ரன்னில் வெளியேறினார். 

    ஒருபுறம் ஷ்ரேயாஸ் அய்யர் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 114 பந்துகளில் 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா பி அணி 46.1 ஓவரில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

    இந்தியா சி சார்பில் பப்பு ராய் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, ரஜ்னீஷ் குருபானி,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதமடித்த ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

    இதையடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணி வெற்றி பெற்றதுடன், தியோதர் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
    #DeodharTrophy #Rahane #shreyasIyer
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ரகானே ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் விளாசினார். #DeodharTrophy #Rahane
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கெதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகனே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ பேட்டிங் செய்து வருகிறது.
    தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ‘பி’ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #DeodharTrophy
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். நேற்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை இந்தியா ‘பி’ 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்று இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது. பிரசாந்த் சோப்ரா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோப்ரா 17 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.

    விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ‘பி’ 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்பானி, பப்பு ராய் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் சமர்த், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமர்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரகானே உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ரகானே 32 ரன்களிலும், ஷுப்மான் கில் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவ் 39 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்னிலும் வெளியேறிய பின்னர், இந்தியா ‘ஏ’ அணி தடுமாற ஆரம்பித்தது. இஷான் கிஷன் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ 48.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘பி’ 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்ததால் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    மணிஷ் பாண்டே சதம் அடித்தும் இந்தியா ‘பி’ அணி ஆஸ்திரேலியா ‘ஏ’விடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா பி - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘பி’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் 36 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷுப்மான் கில் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 109 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் குவிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.



    பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் நீண்ட நேர ஆட்டம் தடைபட்டது.

    பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 93 பந்தில் 101 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஏ 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி அபார பந்து வீச்சால் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


    கலீல் அஹமது

    அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குளேயெட் (24), பீட்டர் மலன் (47), சரேல் எர்வீ (20) சிறப்பான தொடக்கம் கொடுக்க 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ஏ அணிகள் வெற்றி பெற்றன.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன, ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ ரன் குவிக்க திணறியது. அம்பதி ராயுடு 48 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 35 ரன்களும் அடிக்க 49 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘பி’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 114 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இளம் வீரர் ஷுப்மான் கில் 42 ரன்கள் அடிக்க இந்தியா ‘பி’ 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


    டிராவிஸ் ஹெட்

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ டிராவிஸ் ஹெட் (110), மார்கஸ் லபுஸ்சேக்னே (65), ஆர்கி ஷார்ட் (49), ரென்ஷா (42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.

    பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கிஹான் (50), கயா சோண்டா (117) ஆகியோர் சிறப்பான ஆடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 48.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    ×