search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா சி"

    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் ரகானேவின் அபாரமான சதத்தால் இந்தியா ‘சி’ அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. #DeodharTrophy #Rahane #shreyasIyer
    தியோதர் டிராபி இறுதிப் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கு எதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகானே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    அதன்பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால் இறங்கினர்.



    மயங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடினார். கெய்க்வாட், அய்யர் ஆகியோர் சேர்ந்து 116 ரன்கள் ஜோடி சேர்த்தனர். கெய்க்வாட்60 ரன்னில் வெளியேறினார். 

    ஒருபுறம் ஷ்ரேயாஸ் அய்யர் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 114 பந்துகளில் 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா பி அணி 46.1 ஓவரில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

    இந்தியா சி சார்பில் பப்பு ராய் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, ரஜ்னீஷ் குருபானி,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதமடித்த ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

    இதையடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணி வெற்றி பெற்றதுடன், தியோதர் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
    #DeodharTrophy #Rahane #shreyasIyer
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ரகானே ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் விளாசினார். #DeodharTrophy #Rahane
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கெதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகனே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ பேட்டிங் செய்து வருகிறது.
    தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ‘பி’ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #DeodharTrophy
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். நேற்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை இந்தியா ‘பி’ 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்று இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது. பிரசாந்த் சோப்ரா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோப்ரா 17 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.

    விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ‘பி’ 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்பானி, பப்பு ராய் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் சமர்த், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமர்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரகானே உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ரகானே 32 ரன்களிலும், ஷுப்மான் கில் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவ் 39 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்னிலும் வெளியேறிய பின்னர், இந்தியா ‘ஏ’ அணி தடுமாற ஆரம்பித்தது. இஷான் கிஷன் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ 48.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘பி’ 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்ததால் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ×