search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடவசதி"

    • 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.
    • ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சாலை நரியம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நரியம்பாளை யத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்ப ங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூவானம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நரியம்பாளை யத்திற்கும் , பூவானம் கிராமத்திற்கும் 15 கி.மீ. இருப்பதால் நாங்கள் அனைவரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    குழந்தைகள், பெரியவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. போதிய பஸ் வசதியும் கிடையாது. எனவே எங்களுக்கு ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந்தேதி பல்லடம் கடை வீதியில் வணிகர் சங்க அலுவலக திறப்பு விழாவிற்க்கு வரும் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×