search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூர விழா"

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளிசித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் உற்சவத் திருவிழா ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது.

    இதனை யொட்டி நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், 501 பேர் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவில் அருகே உள்ள பம்பை நதியில் இருந்து சிவகாளி சக்தி கரக ஊர்வலம் நடந்து.

    இதில் 1500 பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

    இந்த விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், மனோகர், காவேரிப்பாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி், தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது.
    • பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 21 வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். பின்னர் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் சார்பில் வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் பூபதி, கவிதா, வசந்த் செய்திருந்தனர்.

    தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 வீதிகளில் உலா வந்தார். இதைத்தொடர்ந்து பூஜைகள் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன், மகளிர்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். சோழ வந்தான் திரவுபதி அம்மன்கோவில், காடுபட்டி திரவுபதி அம்மன்கோவில் ஆகிய கோவில்களிலும் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதைத்தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்கா ரத்துடன் கேடயத்தில் வீதி உலா வந்தார். பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    • 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது
    • ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோயில் அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கொடி திருவையாறின் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய நான்கு ராஜவீதிகளில் மங்கள வாத்திய இசையுடன் முன்னே யானை ராஜநடையுடன் பவனி வந்து அம்மன் கோயிலை அடைந்தது.

    பின்னர், வேதபாராயனம், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடி, கொடி மர பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது. இன்றிரவு வெள்ளிப்படிச் சட்டத்தில் அம்பாள் வீதி உலாவும், நாளை முதல் தினமும் காலையில் பல்லக்கிலும் இரவில் சேஷ வாகனம், காமதேனு, வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் மற்றும் குதிரை ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி இரவு வீதி உலா நடக்கிறது.

    28- ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்றிரவு தருமையாதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாள் சுவாமிகளின் அருளாசியுடன் ஐயாறப்பர் கோயில் சூரிய புஷ்கரணி பிரகாரத்தில் அப்பர் கயிலைக் காட்சி விழா நடக்கிறது. 31-ந்தேதி காலையில் அம்பாள் தேர்பவனி நடக்கிறது. மறுநாள் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.

    அன்றிரவு இயல், இசை, நாடகம், தேவாரம், திருவாசகம் திருமுறைப் பாடல்கள் மற்றும் கயிலை வாத்திய இசை முழக்குகளுடன் அம்மன் கோயில் பிரகாரத்தை பக்தர்கள் ஏழுமுறை வலம் வரும் சப்த பிரதச்சனம் நடக்கிறது. ஆடிப்பூர விழா நாட்களில் மாலையில் அம்மன் கோயில் கொலு மண்டபத்தில் தமிழ்ச் சான்றோர்களின் ஆடிப்பூர அம்மன் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இன்னிசை, பாடல் மற்றும் நாட்டியக் கலைநிக ழ்ச்சிகளும் நடக்கிறது.

    2-ந்தேதி பிராயச் சித்த அபிஷேகத்துடன் ஆடிப்பூரம் உற்சவம் நிறைவடைகிறது. இவ்விழா விற்கான ஏற்பாடுகளை தருமையாதீன 27-வது சந்நிதானத்தின் அருளாணைப்படி திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருக்கிறார்கள்.

    • வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 1-ந் தேதி வளைகாப்பு உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெறும்.

    அருணாசலேஸ்வரர் ்கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாசாரியர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா நடைபெற உள்ளன. அன்று விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    தொடர்ந்து தினமும் காலை மாலை அம்பாள் மாடவீதி உலா நடைபெறும். நிறைவு நாளான ஆடிப்பூரம் 10 நாள் ஆகஸ்ட் 1-ந் தேதி திங்கட்கிழமை மாலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்க தீர்த்தக் கரையில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மாள் எழுந்தருல்வார். வளைகாப்பு உற்சவம் நடைபெறும். தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது.

    ×