search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் பலி"

    • அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பாலம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (25), இவர் காகாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்தி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எள்ளு விளையை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் (வயது 70).

    இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் நேற்று மாலை ராஜாக்கமங்கலம் சந்திப்பில் டீ குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எள்ளுவிளை சந்திப்பு அருகில் வரும் போது நாகர்கோவில் இருந்து வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் ஆறுமுகப்பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன ஆறுமுகபெருமாளுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகப்பெருமாளின் மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிம்சன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிலாங்காலை சேர்ந்த ஆல்வின் (33) என்பவரை தேடி வருகிறார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மேல்விசாரணை செய்து வருகிறார்.

    • திருநெல்வேலியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
    • ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள முளகுமூடு கூனிமா விளைப்பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 70), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.

    இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கல்லுவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். விபத்து நடந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் ஜார்ஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து அவரது மகன் அருண்ஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்த சசி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ×