search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே அரசு பஸ் மோதி ஆசிரியர் பலி
    X

    தக்கலை அருகே அரசு பஸ் மோதி ஆசிரியர் பலி

    • திருநெல்வேலியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
    • ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள முளகுமூடு கூனிமா விளைப்பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 70), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.

    இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கல்லுவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். விபத்து நடந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் ஜார்ஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து அவரது மகன் அருண்ஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்த சசி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×