search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடை தீவிரம்"

    • பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும்.
    • இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள்.

    பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

    தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.

    இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காம நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜ பாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறும்போது, "பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.

    • தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு.

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் மானா வாரி நிலங்களில் மழைக் காலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் மேற்கொள் கின்றனர். பாசன வசதியுள்ள விவசாயிகள் இறவை முறையிலும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலக்கடலைக்கு தண்ணீர் இன்றி காய்ந்தன. ஆனால் கடந்த, 2 மாதங்களாக இப்பகுதிகளில் கன மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், நிலக்கடலை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

    தற்போது, நிலக்கடலை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இம்முறை நிலக்கடலை விளைச்சல் குறைந்து உள்ளதால், நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது, ஒரு கிலோ நிலக்கடலை, ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.40 முதல், ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கிருந்து நிலக்கடலையை, மூட்டைகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    • காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலான கூக்கல்தொரை, சீகுளா போன்ற பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஆங்கில காய்கறிகள் புரூக்கோலி, சுகுனி, சுல்தானை ஐஸ் பிரேக் போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

    தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை அறுவடை செய்து கழுவி, கோத்தகிரி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடு பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு, வங்கிகளில் இருந்து கடன் பெற்று காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை சற்று உயர்ந்து வருகிறது.

    காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பீட்ரூட் கொள்முதல் விலை நிலையாக இருப்பதுடன் இந்த விலை போதுமானதாக உள்ளது. எனவே பீட்ரூட்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×