search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருததுவமனை"

    • சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
    • அமைச்சர் பண்ணைக்காடு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சுகாதார த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

    பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இங்கு மகப்பேறு டாக்டர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ஆஸ்பத்திரியில் உரிய ஆய்வுகள் மேற்கொ–ள்ளப்பட்டு பல்வேறு மே–ம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார். அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    ×