search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்ணாடி உடைப்பு"

    • அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    • மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேட்டூர்:

    நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு சென்ற பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து சேலம் மாவட்டம் மேச்சேரியில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ தலைமையில் தொப்பூர் - பவானி சாலை மேச்சேரி பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வன்னியர் சங்க சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஒகேனக்கல், சேலம், மேட்டூர், தர்மபுரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து தலைமையில் போலீசார் அரசு பஸ் ஒன்றை அங்கு கொண்டு வந்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ் டிரைவர் காயமின்றி தப்பினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட பா.ம.க நிர்வாகிகள் 110 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
    • தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சென்னை பிராட்வேயில் இருந்து அய்யப்பன்தாங்கல் நோக்கி மாநகர பஸ் (எண் 26) நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ஆண்டாள் பிள்ளை ஓட்டி வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமான முறையில் பயணம் செய்தனர்.

    இதனை பஸ் கண்டக்டர் செல்வகுமார் கண்டித்தார். ஆனால் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதேபோல் தொங்கியபடி பயணம் செய்தனர். கே.கே நகர் ராஜமன்னார் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திய கண்டக்டர் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். பஸ்சில் இருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீரென பஸ்சின் மீது சரமாரி யாக கல்வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பஸ் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார்.
    • போலீசார் புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை

    ேகாவை அங்காளகுறிச்சி என்.ஜி.கே.நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று பஸ்சை ஆர்.எம்.புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் கோட்டூர் பஞ்சாயத்து அலுவலம் வீதி அருகே சென்றபோது சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார். அதனை பார்த்த பஸ் டிரைவர் ஜெகநாதன் அந்த வாலிபரிடம் ஓரமாக நில்லுங்கள். சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கிறது என அறிவுரை கூறினார்.

    இதனால் அந்த வாலிபர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் சாைலயில் இருந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் உடனே கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கோட்டூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (38) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அரசு பஸ் டிரைவர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×