search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு நடவடிக்கை"

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.

    அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    • போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம்

    நாகர்கோவில், ஜூன்.10-

    குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் இனையம் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய தேங்காபட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. ஓரளவு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட மணல் திட்டுக்களாலும், கடல் அலை சீற்றத்திலும் சிக்கி அடிக்கடி விபத்துக்கள் நடந்தன..

    இதனை தொடர்ந்து மீனவர்களின் நலன் கருதி, துறைமுக முகத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், பல முறை சட்டமன்றத்திலும், முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து மத்திய அரசு நிதியும் கோரப்பட்டது. அதன்பிறகு மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் தொடங்கபட்டு நடந்து வந்தது. ஆனால் இந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக மீனவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது தொடர் முயற்சியின் காரணமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறு கட்டமைப்பு பணிகளுக்கு மூன்றாம் கட்டமாக, ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் ரூ.253 கோடிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் பொறியாளர்கள் அளித்த திட்ட வரைபடத்தின் அடிப்படையில் நடந்து வந்தது.

    தற்போது வரை சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் பாறைகள் கொட்டப்பட்டு துறைமுக மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கடலில் போடப்பட்ட கருங்கல்கள் அனைத்தும் கடல் சீற்றத்தினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இதனால் துறைமுக மறு கட்டமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகும். இதனால் வரும் மாதங்களில் துறைமுக நுழைவாயில் வழியாக மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் பெரிய கருங்கற்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்காக பெரிய கருங்கற்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசும், மீன்வளத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து துறைமுக மறுகட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து மீனவர்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×