search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா பொருளாதார தடை"

    ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், அமெரிக்காவுடன் நான் செய்த ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தவறி விட்டதாக அந்நாட்டின் முதுபெரும் தலைவரான ஹயாத்துல்லா கமேனி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    ஹயாத்துல்லா கமேனி

    இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, 'கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க அரசுடன் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாகவே இவ்விவகாரம் தொடர்பாக நமது நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன். அதற்கு ஹயாத்துல்லா கமேனியும் சம்மதம் தெரிவித்தார்.

    ஆனால், அப்போது பொது வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டாலும் இதைப்போன்ற ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எந்நேரத்திலும் நமக்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். மேலும் பொருளாதார தடைவிதித்தது.

    இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

    ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும். இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

    இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அந்த நாட்டுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார்.

     ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஷரிப், திங்கட்கிழமை இந்தியா வந்திருந்தார். தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பத்திரிகைகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ஷரிப், ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை’’ என்று கூறியதாக முன்னணி பத்திரிகை கியோடோ செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வாய்ப்பில்லை.
    இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில்,  நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat 
    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சூளுரைத்துள்ளார். #Iransanctions #USsanctions #Rouhani
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    ஈரான் மக்களிடையே இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ரவுகானி, 'சர்வதேச நெறிமுறைகளை மீறி எங்கள் மீது உங்களால் (அமெரிக்கா) திணிக்கப்பட்டுள்ள சட்டமீறலான அத்தனை தடைகளையும் தகர்த்து நாங்கள் பெருமையுடன் முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார். #Iransanctions #USsanctions #Rouhani
    ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். #IranSanctions #USSanctions
    தெக்ரான்:

    ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது.

    மேலும் ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடை இருக்கும் என்றும் எச்சரித்தார். ஈரான் மட்டுமின்றி அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த தடை பாயும் என்றும் தெரிவித்தார்.

    அந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரத்துக்கு புறப்படும் முன்பு அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஈரான் மீதான பொருளாதார தடை கடுமையாக இருக்கும். அது எப்போதும் இல்லாத வகையில் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். என்ன நடக்கும் என்பதை பார்க்க தானே போகிறோம் என்றார்.

    இதன் மூலம் எண்ணை ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.



    தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதே போன்று மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஈரான் ராணுவத்தின் போர் விமானங்கள் வானத்தில் பறந்து பயிற்சிகள் மேற்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு பணியில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதை காட்டுவதற்கு இவை நடத்தப்பட்டன.

    ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். #IranSanctions #USSanctions
    அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    தி ஹேக்:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

    குறிப்பாக ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் ஆற்றல் துறைகளை குறிவைத்து மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.  இதனால் ஈரான்  பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. அந்நாட்டின் பண மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை தொடங்க உள்ளது. அப்போது ஈரான் அரசு தங்கள் தரப்பு நியாயத்தையும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக கூற உள்ளது.



    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சீர்படுத்த முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்றும் ஈரான் தனது மனுவில் கூறியிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இந்த அம்சங்களை முன்வைத்து இன்று ஈரான் தனது வாதத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரான் வாதம் இன்று முடிந்ததும், வாஷிங்டன் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை ஆஜராகி வாதாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    ×