search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க வெள்ளை மாளிகை"

    • உலகெங்கும் பலர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்கை வன்மையாக கண்டித்துள்ளது

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 40 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    எலான் மஸ்கின் (Elon Musk) கருத்தை அமெரிக்க அரசாங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

    இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் (Andrew Bates) பேசியதாவது:

    இது யூத இனத்திற்கு எதிராக மறைமுகமாக வெறுப்பை தூண்டும் கண்டனத்திற்குரிய பதிவு மட்டுமல்ல; அமெரிக்கர்களின் அடிப்படை சித்தாந்தத்திற்கே எதிரானது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில், யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை கொடுமைகளுக்கு பிறகு அதற்கு நிகராக அக்டோபர் 7 அன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யூதர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ள வேளையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் வைப்பது சற்றும் ஏற்க முடியாதது.

    இவ்வாறு ஆண்ட்ரூ பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018ல், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு "வெள்ளையர்கள் அல்லாதவர்கள்" அதிகளவில் புலம் பெயர்வதை யூதர்கள் ஊக்கப்படுத்தி, இதன் மூலம் வெள்ளையர்களை அழிக்க முயல்வதால், இந்த சம்பவத்தை நடத்தியதாக அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர் தெரிவித்தார்.

    தற்போது மஸ்க் ஆதரித்துள்ள எக்ஸ் பதிவு, இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவது போல் ஆகி விடும் என்பதால், அமெரிக்காவில் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
    • வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு

    இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.

    இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.

    ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

    யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×