என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க நிறுவனங்கள்"
- நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
- மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதமும் நிலவி வருகிறது.
50சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் பெரிய சந்தையை கொண்டுள்ள அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கக்கூடும்.
சுதந்திர போராட்ட சமயத்தில் இந்தியரகள் கையில் எடுத்த சுதேசி இயக்கம், நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, சுதேசி பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து சமீப காலங்களில் மேடை தோறும் பேசி வருகிறார்.
அதன்படி அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்கொள்ள இத்தகு அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
உலகிலேயே அதிக (145 கோடிக்கும் அதிகமான) மக்கள் தொகை இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது அந்நாட்டுக்கு பேரிழப்பாகும்.
வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட் உடைய மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.
இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் 4,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பது அந்நிறுவனங்களின் மீதான அழுத்தமாக மட்டுமல்லாமல் அமெரிக்க பொருளாதரத்தின் மீதான மறைமுக தாக்கமாக மாறக்கூடும்.
- ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
- சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.
அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.
எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.
இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.
"கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.






