search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமல்படுத்த"

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன.
    • திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாக த்தின் முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் பொது மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என தனித்தனியாக செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    ஒரு சில திட்டங்கள் மாநில, மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஒவ்வொரு ஊராட்சிகளும் கடந்த நிதியாண்டில் என்னென்ன திட்டங்கள், எத்தனை மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    என்னெ ன்ன திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊராட்சியின் மக்கள் தொகை எவ்வளவு. எத்தனை குடிநீர் இணைப்பு கள் உள்ளன.

    குடியிருப்புகள் எத்தனை என ஊராட்சி குறித்த முழு தகவல்கள் அடங்கிய விபர ங்களை ஊராட்சி அலுவ லகத்திற்கு முன்பாக பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும்படியும் ஊராட்சி நிர்வாகம் வெளித்தன்மையோடு செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் பெயர் பலகை வைக்க மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரும், கூடுதல் கலெக்டருமான மணீஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்திலுள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    • ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
    • அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். செயலாளர் மருதமுத்து சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமரவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மேன்மேலும் வளர சங்கத்தின் சார்பில் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2017-ல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழுவின் நிலுவை தொகையை அனுமதித்து வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாகவும், மருத்துவப்படியை ரூ.ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் நாள் முதலே நிலுவையின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையாக ஓய்வூதியர்களுக்கு ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கண்புரை சிகிச்சைக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."

    • பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
    • மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும்

    கரூர்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 6-வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஆ.மனோகரன் தலைமையில் கரூர் தனியார் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் எம்.பழனியப்பன், மாநில செயலாளர் எஸ்.ராஜசேகர், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் மு.மகாவிஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாவட்ட துணைத்தலைவர் மா.பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தி.திருஞானசம்பந்தம், மாவட்ட செயலாளர் மா.சரவணன், மாவட்ட பொருளாளர் ம.தமிழ்வாணன், மாவ ட்ட தணிக்கையாளர்கள் டி.சுரேஷ், வெ.சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் நா.வெங்கடாசலம் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் சு.சரிதா நன்றி கூறினார்.

    கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதுப்போல 3 சதவீத அகவிலைப்படி அறிவித்து ரொக்கமாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படு த்தப்படவேண்டும். பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் மதிப்பீ ட்டு வரம்பு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசு ஆணை வழங்கவேண்டும்.

    பணி மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய அளவில் ஜீப் ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், இரவு காவலர்கள் பணியிடங்கள், ஊராட்சி செயலர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×