search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with full information in"

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன.
    • திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாக த்தின் முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் பொது மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என தனித்தனியாக செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    ஒரு சில திட்டங்கள் மாநில, மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஒவ்வொரு ஊராட்சிகளும் கடந்த நிதியாண்டில் என்னென்ன திட்டங்கள், எத்தனை மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    என்னெ ன்ன திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊராட்சியின் மக்கள் தொகை எவ்வளவு. எத்தனை குடிநீர் இணைப்பு கள் உள்ளன.

    குடியிருப்புகள் எத்தனை என ஊராட்சி குறித்த முழு தகவல்கள் அடங்கிய விபர ங்களை ஊராட்சி அலுவ லகத்திற்கு முன்பாக பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும்படியும் ஊராட்சி நிர்வாகம் வெளித்தன்மையோடு செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் பெயர் பலகை வைக்க மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரும், கூடுதல் கலெக்டருமான மணீஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்திலுள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    ×