search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பரசன்"

    • ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
    • பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று உள்ளார். சிலி குடியரசு நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சான்டியாகோ மாநகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றார்.

    சிலி குடியரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் புதிய தொழில் நுட்பம் குறித்து பேசினார்.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5 லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

    இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் திறனுக்கேற்ற வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முன்னோடியாக 6 திட்டப் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், தங்கும் இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து 5 லட்சம் குடியிருப்புகள், தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.30 லட்சம் குடும்பங்களுக்கு மனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    செங்கல்பட்டில் இப்போது உள்ள பஸ் நிலையம் மிகுந்த நெருக்கடியான இடத்தில் உள்ளது. இதனால் அங்கு புதிய பஸ் நிலையம் வெம்பாக்கம் ஏரி அருகே மெயின்ரோட்டுக்கும் பி.வி.களத்தூர் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகிய இருவரும் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.

    பஸ் நிலையம் 14 ஏக்கரில் அமையும் பகுதியில் ரோட்டுக்கு மருத்துவக் கல்லூரி மைதானம் அருகே எதிர்புறம் காலி இடம் ஏக்கர் கணக்கில் உள்ளதால் அங்கு 5.64 ஏக்கரில் பஸ் டெப்போ (பணிமனை) அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டில் புதிதாக அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணி மனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
    • பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் தாலுகாவில் "ஜமாபந்தி" வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 857 பேருக்கு, 2.07, கோடி ரூபாய் மதிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பாபு, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×