என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்குமார் கொலைவழக்கு"

    • நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது.
    • இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படும் பேராசிரியை நிகிதா வரும் மார்ச் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 9.5 சவரன் நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

    இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் நிகிதாவை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.  

    • சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர்.
    • இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 28) என்பவரை கடந்த ஜூன் மாதம் நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அஜித் குமாரை அழைத்துச் சென்று தாக்கி கொன்றதாக மானாமதுரை தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் போலீஸ் காவலில் தான் அஜித்குமார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. விசாரிக்க சொன்னதால் கடுமையாக தாக்கி போலீசார் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் 10 போலீஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. பொய் புகாரில் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக ஒரு அப்பாவியை தாக்கி கொலை செய்துள்ளனர். மனம் பதைபதைக்கிறது என்று தெரிவித்ததோடு பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாரின் தாயார் மாலதி இன்று பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். இந்த வழக்கில் எனது மகன் திருடன் இல்லை என்று நீதிபதி கூறியிருப்பது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. இருப்பினும் எனது மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். ஆனால் அது குறித்து எனக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டுக்கு வந்த போலீசார் பீரோவை திறந்து அதில் இருந்தவைகளை சோதனை செய்தனர்.

    அப்போது மற்றொரு மகனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கும் பயம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அங்கு என்னை போலீசார் விரட்டி விட்டனர். உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்ட போதும் மகன்களை போலீசார் விசாரித்து விட்டுவிடுவார்கள் என்று கூறினார்கள். அதை நம்பி இருந்த நிலையில் எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். எனது மகன் நகையை எடுத்தது யார் பார்த்தார்கள்? பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்.

    அஜித் குமாரை விசாரிக்க சொல்லி 5 போலீஸ்காரர்களிடம் கூறிய உயர் அதிகாரி யார்? என்பது எங்களுக்கு தெரியவேண்டும்.

    கஞ்சிக்கு இல்லாவிட்டாலும் வைராக்கியத்துடன் மகன்களை வளர்த்துள்ளேன். ஆனால் நகை திருட்டு பொய் புகாரை கூறி எனது மகனை சாகடித்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் எதற்காக எனது மகனை அடித்தார்கள்? யார் அடிக்க சொன்னது? எனது மகனை கொலை செய்து சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்கள் உட்பட யாரும் வெளியே வரக்கூடாது.

    சி.பி.ஐ. விசாரணை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு தாய் என்ற உணர்வுடன் நீதிபதி நேற்று இந்த வழக்கில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளதை உணர்ந்துள்ளேன் என்றார்.

    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
    • டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது

    திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி,  "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

    ×