search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜய் மக்கான்"

    • வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன
    • ரூ.210 கோடி வரி பாக்கிக்கு இதை செய்துள்ளதாக அஜய் குற்றம் சாட்டினார்

    மக்களவையின் 543 இடங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாத இடையில் நடைபெறவுள்ளது.

    தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

    இதனால், தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உட்பட அவை இரண்டின் கூட்டணி கட்சிகள், நாடு முழுவதும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான் (Ajay Maken) இன்று குற்றம் சாட்டினார்.

    இது குறித்து அஜய் மக்கான் தெரிவித்ததாவது:

    பொது மக்களிடமிருந்து நிதி (crowdfunding) பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.

    ரூ.210 கோடி வருமான வரி பாக்கிக்காக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அஜய் தெரிவித்தார்.

    2018ல் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த "தேர்தல் பத்திர திட்டம்" செல்லாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் பரவலாக வரவேற்றுள்ளன.

    இப்பின்னணியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி முடக்கம் நடைபெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்களின் பார்வை உள்ளது.

    • அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா்.
    • பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.

    புதுடெல்லி:

    காங்கிரசின் புதிய பொருளாளராக கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கட்சி பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா். முன்பு இப்பதவி வகித்த பவன் குமாா் பன்சால் ஆற்றிய பங்களிப்புக்காக, கட்சி அவரைப் பாராட்டுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சி பொருளாளா் பவன் குமாா் பன்சாலுக்கு மாற்றாக, அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.

    • ஆம் ஆத்மி போட்டியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு
    • டெல்லி மாநில அரசு அதிகாரம் விவகாரத்தில் காங்கிரஸ் உதவி தேவைப்படுகிறது

    காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜனதாவுக்கு உதவி செய்வதற்காகவே எங்களை எதிர்த்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர் சந்திப்பை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அஜய் மக்கான் கூறுகையில் ''நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்து, அதன்மூலம் பெறப்பட்ட பணத்தை, காங்கிரசுக்கு எதிராக கோவா, குஜராத், பஞ்சாப், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அசாமில் சதிவேலையில் ஈடுபடுத்தியுள்ளீர்கள். உங்களுடைய செயல்கள் கவனிக்கப்படாமல் இல்லை என்பது உறுதி. இதெல்லாம் பா.ஜனதாவுக்கு உதவுவதற்காகத்தான்.

    ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்கிறார் கெஜ்ரிவால். எனினும் மற்றொரு பக்கம் ராஜஸ்தானில் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்ற தலைவர்களுக்கு எதிராக பேசி வருகிறார். எங்களுடன் கைக்கோர்க்க விரும்கிறாரா? அல்லது விலகி நிற்க விரும்புகிறாரா?

    தற்போது கெஜ்ரிவால் தெரிவித்து வருவது ஒன்றும் புதிதல்ல. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட எங்களுக்கு எதிரான அறிக்கையை கொடுத்தார்கள்.

    விசயம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டிருந்த போதிலும், ஜெயிலுக்கு செல்ல விரும்பவில்லை. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர் கட்சியின் இரண்டு பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் இருப்பது ஒற்றுமைக்காக அல்ல, ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக. ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் அங்கு சென்றார்'' என்றார்.

    ×