என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் முதலமைச்சர்"

    • நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
    • 2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார்.

    அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2014-ஆம் ஆண்டிலேயே தாம் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தியின் தலையீட்டால் அப்போது நிலைமை தலைகீழாக மாறியதாகவும், அதனால் தான் அந்த பதவியை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று மாநில சட்டமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா,

    "நான் இன்னும் மேடம் என அழைக்கும் அவர் (சோனியா காந்தி) என்னிடம் தேதியை முடிவு செய்யச் சொன்னார். ஜூன் (2014) மாதம் காமாக்யா கோயிலில் நடக்கும் அம்புபாச்சி மேளாவுக்கு அடுத்த நாள் நான் சத்தியப்பிரமாணம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.

    ஆனால் அமெரிக்காவில் இருந்துவந்த ராகுல் காந்தியின் அழைப்பால் நிலைமை மாறியது. எனக்கு நீதி வழங்கப்படவில்லை, ஆனால் கார்கே எப்போதும் கட்சியில் உள்ள எனது எதிரிகளிடம்: 'நீங்கள் ஹிமந்தாவுடன் சண்டையிடுங்கள், ஆனால் அவரிடம் தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்.

    அப்போது நான் மனவேதனை அடைந்தேன், ஆனால் இப்போது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.

    பாஜக முதலமைச்சராக, அசாம் மாநிலத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் முழுமனதுடன் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் காங்கிரஸில் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. இதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் உண்மைகள், இதற்கு பல சாட்சிகள் உள்ளனர். ஆனால், நடக்காமல் போனதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனெனில் அது நடந்திருந்தால், நான் என்றென்றும் களங்கப்பட்டிருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

    2014-இல் அசாம் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் போது, 58 எம்.எல்.ஏ.க்கள் ஹிமந்தா சர்மாவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஒருசிலர் நடுநிலை வகித்ததாகவும், அதே நேரத்தில் 12 பேர் மட்டுமே தருண் கோகோயின் ஆட்சி தொடரவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். 

    2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2021-ல் அசாமின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
    • பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.

    கவுகாத்தி:

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×