search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth mystery death"

    மங்களமேடு அருகே மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த மங்களமேடு அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. செல்வராஜின் உறவினர் ஆலத்தூர் நொச்சிகுளத்தில் வசித்து வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அந்த தூக்க நிகழ்ச்சியில் செல்வராஜ் கலந்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் உள்ள ஒரு மரத்தில் செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜின் உடலில் காயங்கள் உள்ளது. அதனால் அவரை யாரும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? செல்வராஜுக்கு  குடி பழக்கம் உள்ளதால் அந்த தகராறில் கொலை சம்பவம் எதுவும் நடந்ததா அல்லது உறவினர் இறந்த  துக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    விழுப்புரம் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ளது அத்தியூர் திருவாதி. இங்கு தென்பெண்ணையாறு ஓடுகிறது.

    இந்த ஆற்றின் கரையோரம் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    ஆற்றங்கரையோரம் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அந்த வாலிபர் பேண்ட்-சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    மேலும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுயாராவது அவரை கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றார்களா? என்ற விவரம் தெரியவில்லை.

    பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வாலிபரின் மர்மசாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணாடம் அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). விவசாயி.

    இவர் நேற்று மாலை பெண்ணாடத்துக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

    பெண்ணாடம் மாளிகை கோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வேல்முருகன் சென்றார். அங்கு மது வாங்கி குடித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக மாளிகை கோட்டத்தை சேர்ந்த வேல்முருகனின் நண்பர் விமல் மினி லாரியில் வந்தார்.

    டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த வேல்முருகனை பார்த்ததும் விமல் மினி லாரியை விட்டு கீழே இறங்கி அவரையும், மொபட்டையும் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வேல்முருகனின் வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த விவரத்தை விமல் கூறினார். பின்னர் அவர்கள் வேல்முருகனை மினி லாரியில் இருந்து கீழே இறக்கியபோது அவர் இறந்து விட்டதை அறிந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் குடும்பத்தினர் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து வேல்முருகனின் பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனின் நண்பர் விமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர் அருகே மாயமான வாலிபர் கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னு சேரியைச் சேர்ந்தவர் உடையார். இவரது மகன் பாலமுருகன் (வயது 22). இவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் பாலமுருகனை தேடினர். பலன் இல்லை. எனவே கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலமுருகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கீழக்கரை சேரியில் உள்ள கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தான் பாலமுருகன் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    ×