என் மலர்
நீங்கள் தேடியது "Yoga festival"
- புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
- விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
,ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் ஆகும். இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் மத்திய ஆயுஷ் அமைச்சக மெரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இதற்காக புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் யோகா குறித்து இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. எந்த இடத்திலும் இல்லாத வகையில் முழுவதுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து புதுச்சேரி மக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று இரவோடு இரவாக கடற்கரை சாலை உள்பட நகரில் பல்வேறு இடங்களில் யோகா விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தி விளம்பர பேனர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக அரசு சார்பில் தமிழில் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.
- ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) சர்வதேச யோகா மஹோற்சவ விழா நடக்கிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.
புதுவையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
இந்த நிலையில் யோகா நாள் விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்தி விளம்பர பலகைகளில் இந்தி மொழியை புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
- யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளுக்கான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.
புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்
இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
- புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
- மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.






